மௌனமாகவே பல ஊழியர்களை பணிநீக்கம் செய்த Accenture… அதிர்ச்சியில் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள்!



சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் முன்னணி ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture), கடந்த மூன்று மாதங்களில் உலகளவில் 11,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கான தேவைகள் குறைந்திருப்பதே இந்த ஆட்குறைப்பின் முக்கிய காரணமாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 865 மில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்சென்ச்சர் தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் மாதங்களில் கூடுதல் பணிநீக்கங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, நிறுவனத்திற்குத் தேவையான திறன்களை ஊழியர்களிடம் உருவாக்க பயிற்சி வழங்குவது சாத்தியமில்லாத சூழ்நிலையில், குறுகிய காலத்துக்குள் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நிறுவனத்தின் பணியாளர்களை விரைவாக மாற்றி அமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இதனால், தற்போதைய தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள முடியாத ஊழியர்கள் எதிர்காலத்தில் மேலும் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, அக்சென்ச்சரின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 7,79,000-ஆக குறைந்துள்ளது. இது, மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த 7,91,000 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி, நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்புத் திட்டம் பெரும்பாலும் பணிநீக்கத்திற்கான செலவுகளை கவனிக்க உருவாக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கு மேல் செலவுகளை குறைத்து சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய AI திறன்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குதல்: பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அக்சென்ச்சர் நிறுவனம் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் முதலீடு செய்து வருகிறது. சிக்கலான பணிகளை தானாகச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை AI கருவிகள் — 'Agentic Artificial Intelligence' — குறித்த பயிற்சியை நிறுவனம் ஊழியர்களுக்குத் தொடங்கியுள்ளது.

உலகளாவிய நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைக்க முனைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கிடையே, அக்சென்ச்சர் நிறுவனம் தனது நிதியாண்டின் ஜூன்-ஆகஸ்ட் காலாண்டில் 17.6 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 7% அதிகம் மற்றும் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விஞ்சியது. இந்த முடிவுகள், வாடிக்கையாளர்களுக்கு AI உடன் இணைந்து புதுமைகளை உருவாக்க உதவும் அக்சென்ச்சரின் தனித்துவமான திறனைக் காட்டுகிறது என்று ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வருகை, நிறுவனங்களின் செயல்முறையை மாற்றுவதோடு, பணியாளர்களின் திறன்களிலும் பெரிய மாற்றத்தை கோரி வருகிறது. இந்த நிலை, தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய திறன் மேம்பாட்டின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.

Accenture Layoffs & AI Restructuring – Quick Summary

Accenture has laid off over 11,000 employees globally in the past three months as part of a $865 million restructuring plan. The move is driven by rapid AI adoption and reduced demand for certain roles. CEO Julie Sweet stated that the company is unable to retrain all staff quickly enough, prompting short-term exits. More layoffs may follow.

Despite this, Accenture is investing in upskilling employees in advanced AI tools like Agentic Artificial Intelligence. The company reported $17.6 billion in revenue for the June–August quarter, a 7% increase year-over-year, showcasing its strength in AI-driven innovation.

 


சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் முன்னணி ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture), கடந்த மூன்று மாதங்களில் உலகளவில் 11,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கான தேவைகள் குறைந்திருப்பதே இந்த ஆட்குறைப்பின் முக்கிய காரணமாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 865 மில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்சென்ச்சர் தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் மாதங்களில் கூடுதல் பணிநீக்கங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, நிறுவனத்திற்குத் தேவையான திறன்களை ஊழியர்களிடம் உருவாக்க பயிற்சி வழங்குவது சாத்தியமில்லாத சூழ்நிலையில், குறுகிய காலத்துக்குள் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நிறுவனத்தின் பணியாளர்களை விரைவாக மாற்றி அமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இதனால், தற்போதைய தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள முடியாத ஊழியர்கள் எதிர்காலத்தில் மேலும் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, அக்சென்ச்சரின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 7,79,000-ஆக குறைந்துள்ளது. இது, மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த 7,91,000 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி, நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்புத் திட்டம் பெரும்பாலும் பணிநீக்கத்திற்கான செலவுகளை கவனிக்க உருவாக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கு மேல் செலவுகளை குறைத்து சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய AI திறன்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குதல்:
பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அக்சென்ச்சர் நிறுவனம் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் முதலீடு செய்து வருகிறது. சிக்கலான பணிகளை தானாகச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை AI கருவிகள் — 'Agentic Artificial Intelligence' — குறித்த பயிற்சியை நிறுவனம் ஊழியர்களுக்குத் தொடங்கியுள்ளது.

உலகளாவிய நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைக்க முனைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கிடையே, அக்சென்ச்சர் நிறுவனம் தனது நிதியாண்டின் ஜூன்-ஆகஸ்ட் காலாண்டில் 17.6 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 7% அதிகம் மற்றும் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விஞ்சியது. இந்த முடிவுகள், வாடிக்கையாளர்களுக்கு AI உடன் இணைந்து புதுமைகளை உருவாக்க உதவும் அக்சென்ச்சரின் தனித்துவமான திறனைக் காட்டுகிறது என்று ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.


செயற்கை நுண்ணறிவின் வருகை, நிறுவனங்களின் செயல்முறையை மாற்றுவதோடு, பணியாளர்களின் திறன்களிலும் பெரிய மாற்றத்தை கோரி வருகிறது. இந்த நிலை, தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய திறன் மேம்பாட்டின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.


English summary

Accenture Layoffs & AI Restructuring 

Accenture has laid off over 11,000 employees globally in the past three months as part of a $865 million restructuring plan. The move is driven by rapid AI adoption and reduced demand for certain roles. CEO Julie Sweet stated that the company is unable to retrain all staff quickly enough, prompting short-term exits. More layoffs may follow.

Despite this, Accenture is investing in upskilling employees in advanced AI tools like Agentic Artificial Intelligence. The company reported $17.6 billion in revenue for the June–August quarter, a 7% increase year-over-year, showcasing its strength in AI-driven innovation.


Comments

Popular posts from this blog

உங்களுக்கு சரியாகப் பொருந்துவது எது—ஆயுள் காப்பீடா அல்லது டெர்ம் இன்சூரன்ஸா?